Wednesday, June 10, 2009
காகிதத்தில் செய்த கப்பல்
கடல் நடுவில் தத்தளிக்க !
கன்னியவள் மனமின்றோ
காதலனை எண்ணி எண்ணி !
வருவான் வருவானென்றே
அவள் காலமெல்லாம் காத்திருந்து ...!!!
காதலனும் வந்து விட்டான்
கணவனாக வந்து விட்டான் !
கற்பனையில் வாழ்ந்த கன்னி
கண்டவுடன் அதிர்ந்து விட்டாள் !
விழிகளிலே நீர் சொரிய
மங்கையவள் திகைத்து நின்றாள் !
விடையேதும் புரியாது
வேதனையில் வெந்து நின்றாள்...!!!
வந்தவளோ புது மனவி !
புது மெருகு கலையாது
பூரிப்புடன் புன்னகைத்து நின்றாள்...!!!
வந்தாய் வசந்தம் தந்தாய்
சென்றாய் பிரிந்து நின்றாய்
கொன்றாய் என்னை நன்றாய்
கொழுந்தாய் இதயம் எரித்தாய்
அணுவாய் மனதை சிதைத்தாய்
அறிவாய் ஒரு நாள் புரிவாய்
தெரிவாய் என்னை நாடி வருவாய்
கரும்பாய் கவி பல புனைவாய்
மறுப்பாய் என்னை வெறுப்பாய்
முடிவாய் நான் வெறுப்பேன்
மறைவாய் உள்ள நினைவை
கருவாய் காப்பேன் !
மறவேன்.....
மறக்க முடியாதவளுக்காக...
உனக்கு என்னை மறந்து போயிருக்கும்
காலப்போக்கில் - எனக்கும் உன்னை மறந்து போகும்
முன்பெல்லாம் - உனக்காக அழுகின்ற போது
கிடைக்கப் போகிறவளுக்காக - அழுகிறேன்
என்றொரு ஆறுதல் இருந்தது.....
இன்று...???
தபால் இல்லாத பிரதேசத்திற்கா நீ
சென்றுவிட்டாய்???
உனக்கொரு கடதாசி எழுதிப்போட
நேரம் இல்லாமல் தான் போய் விட்டதா???
என் வாழ்க்கையை கிழித்து விட்டுப்
போனவளே !!
ஒரு சமூகம் தன் மொழியையே
மறந்து விடும் கவலையோடு
நான் இருக்கிறேன்.....
இரு உள்ளங்கள் பேசிக்கொள்ளும்
ஊமை பாஷையில் - இதயங்கள்
இடம்மாறி துடிக்கும்
உலக அதிசயங்களில் - ஒன்று தான்
காதல் ...!
அவளுக்காக அவனும்
அவனுக்காக அவளும் - சுவாசிக்கின்றார்களோ
இல்லையோ - நிச்சயமாய்
மனரணங்களின் - ராட்சச தாக்குதலில்
தங்களையறியாமலேயே சிக்குண்டுதவிக்கிறார்கள்...!
இன்றும்;
பாலைவன கொடுமையில்
பல நாள் தனித்திருப்பினும் - இனியகாதல் நினைவுகளை சுமந்து
எத்தனை கோடி ஆண்டுகளும்
இதமாய் இருப்பார்கள்
இது தான் காதல் என்பதா???
நிலவின் பாதி அவள் நெற்றி
நீண்ட நதியின் பாதி அவள் கூந்தல்
காண்போரை கவரும் கயல் விழி
கண்டவுடன் மயக்கும் அவள் முகம்
காற்றின் கீதம் அவள் வார்த்தை
சங்கீதம் அமைக்கும் அவள் கொழுசொலி
சஞ்சல பட வைக்கும் அவள் நயனம்
அழகின் சொல்லுக்கு அடைக்களம் அவள்........
அரைவாசி மறந்து போனேன்
எனக்கும் மயக்கம் !!!
வந்து விட்டாள்......
சோகங்கள் மட்டும் தான் எனக்கு
சொந்தம் என்று இருந்தேன் - ஆனால்
சொர்க்கத்தை மட்டும் எனக்கு சொந்தமாக்க
இதோ வந்து விட்டாள் என் தேவதை.....
பாலைவனமாக இருந்த என் நெஞ்சில்
பால் வார்க்க இதோ வந்து விட்டாள் என் தேவதை.....
தேள் கொட்டிய என் இதயத்தில்
தேன் கொட்ட இதோ வந்து விட்டாள் என் தேவதை.....
வால் வீசி கிடந்த என் உள்ளத்தில்
தென்றல் வீச இதோ வந்து விட்டாள் என் தேவதை.....
இருந்தும் என்ன பயன்?????
என் தேவதை வந்தது கனவில் மட்டும் தானே!!!
என் இதயமே
என்னிடம் இல்லை என்ற பின்னும்
இன்னுமா உன்னிடம் இறக்கம்
இல்லை???
இருந்தும் ஏனோ இதுவரை
பதிலில்லை.....
மறந்து விடு என்று சொல்வதைவிட
மரணித்து விடு என்று சொல்லிவிடு
மாண்டு போய் செரிந்து
விடுகின்றேன்.....
இன்று நீ என் காதலை மறுக்கின்றாய்
என்றாவது ஒரு நாள் நீ என்
காதலை ஏற்றுக் கொள்வாய்
அப்போ எனக்கு சொல்லி அனுப்பு.....
சித்திரைப் பெண்ணே!!!
இது தான் உனக்கு வைக்க வேண்டிய பெயர்
ஆனால் சித்திரைக்கு நான்கு நாட்கள் முன் பிறந்ததால்
உன் பெயர் மாறி விட்டதடி....
பரவாயில்லை
நீ சித்திரைக்கு முன் பிறந்தாலும் சித்திரை போலவே பசுமையும் உஷ்ணமும் நிறைந்தவள்
என்னடா இவன் உளறுகிறான் என நினைக்கின்றாயா???
நான் உளறவில்லை பெண்ணே - நிஜத்தை தான் செப்புகிறேன்
சித்திரை என்றால் பூத்து குலுங்கும் மலர்களும்
காய்த்துக் கனியும் மரங்களும் சித்திரையின் கத்தரி வெயிலும் தான் நினைவில் வரும்
அது போல பல குணங்களைக் கொண்டவள் பெண்ணே நீ
ஆகவே உனக்கு சித்திரைப் பெண்ணே என நான் வைத்த பெயர்
நிஜமானது தானே....
நீயே சொல் நீ பிறந்த நந்நாளில் உனக்காக - இந்த
கிறுக்கன் கிறுக்கிய சில சில கிறுக்கல்கள்!!!!!
வீணையடி நீ எனக்கு
அப்படி என்னதான் இருக்கின்றது உன்னிடம் என்று என்னையே இன்னும்
கேட்டுக்கொண்டிருகிறேன் !
விடை தெரிய வேண்டும் எனக்கு !
எப்போதும் சலிக்காத உன் பேச்சு எப்போது சலிக்கிறதென்று பார்க்க
என்னருகே நீ வர வேண்டும்...
எப்போதும்!
கவிதையைப் போல ஒரு வாழ்க்கை காலமெல்லாம் வாழ
கனவிலாவது வர வேண்டும் ...நீ எனக்கு!
உனக்கான என் நினைவுகள்
அன்பே, நம் நேசங்களின் சுவாசத்தில் வாழ நேசிகின்றேன்
அதற்காக உன்னை நான் காதலிகின்றேன் !
இன்னும் என்ன யோசிக்கின்றாய் எழுந்து வா இரண்டு பேரும் சேர்ந்து சுவாசிப்போம் நம் காதல் தேசத்தில்
உன்னை நோக்கிய விழிகள் என் நோக்கம் மறந்தன
உன்னை நினைத்த நினைவுகள் என் நினைவை இழந்தன
உன்னுடன் சுற்றிய கால்கள் என்னை மறந்தன
இத்தனையும் கூறும் எனக்கு ஒரு காதலி நீ தானடி
உன்னோடு நானிருந்த...
என் வாழ்வின் வசந்தகால நேரங்களெல்லாம்
உன்னோடு நானிருந்த இன்டெர்நெட் நேரம் தானடி
உனக்கு மறந்து போயிருக்கும் உன் முதல் புன்னகை
என் மனசுக்குள் வெப்கேம்மை பார்த்த நேரங்கள்
அந்த நொடி பசுமையாய் என் நினைவில்
பார்வைகள் மட்டும் தானே வெப்கேம்மில் பரிமாறிக் கொண்டோம்
ஆனாலும் எப்படி நீ மொத்தமாய் என்னுள்?
நம் மௌனங்கள் தெளிவாய் பேசிக்கொள்வதை
நாம் சந்தோசமாய் இன்டெர்நெட்டில் பேசுவோம் வா !
உதிரிப்பூவாய் கிடக்கும் என்னை
கோர்த்து மாலையாய் கட்டி
ஏற்றுக்கொள்வாய் - என்று
காத்திருந்த வேளையில்.....
நீயும் வந்தாய் - ஆனால்
என்னை எற்றுகொள்ள அல்ல.....
நீ ஏற்றுக்கொண்ட பெண்ணை
என்னிடம் காட்டுவதற்க்காக.....
அப்போது உதிர்ந்து போய் கிடந்தது
அந்த உதிரிப்பூக்கள் மட்டும் அல்ல....
என் இதயமும் தான்......
