Wednesday, June 10, 2009

காதல் தீ


ஏன் விரும்பினாய் என்னை?

ஏன் விதைத்தாய் அன்பை?

ஏன் கேட்டாய் நெஞ்சை

பெற்ற பின் பிரிந்தாய் என்னை?

அழுது நான் ஆறவில்லை

காயமது காயவில்லை

வேகாத நெஞ்சமதில்

விதைத்தாய் நீ - காதல் தீயை

என்று தீரும் - இச் சோகம்

யார் அளிப்பார் ஆறுதலை

பதில் சொல்வார் எவருமில்லை.....

No comments:

Post a Comment