திருடா !!
உயிருடன் உயிராய்ச் சங்கமித்தவனே
ஒரு முறை நினைத்துப் பார் - என்னையல்ல
எமது பள்ளி வாழ்க்கையை
பல்லாங்குழி ஆட்டங்களை
பழகிப் பண்பான நண்பனாய்
பாசங்காட்டி பறித்து விட்டாய்
பாவியான என் இதயத்தை
திருடியதை மீண்டும் கொடுத்து விட்டு
திருந்தியவனாய் வேடங்கொள்வது
உனக்கே நியாயம் தானா???

No comments:
Post a Comment