Wednesday, June 10, 2009

விழித்தெழு தமிழா...

உள்ளொன்று இருக்க
புறமொன்று பேசும்
உயிர் கொல்லி - மனிதன்
உயிர் பெற்ற நாட்டில்
உண்மையை பேச
உயிர் கொடு தமிழா...!

தானென்ற அகந்தை
தரணியில் அழிய
தரம் கொண்ட மனிதனை - நல்
தலைவன் ஆக்கிட
போர் தொடு தமிழா...!

நல்லதை செய்ய
நாட்டிற்காய் வாழ
துணிந்தெழு தமிழா - நீயும்
விழித்தெழு தமிழா...!

No comments:

Post a Comment