Wednesday, June 10, 2009

வந்து விட்டாள்......


சோகங்கள் மட்டும் தான் எனக்கு

சொந்தம் என்று இருந்தேன் - ஆனால்

சொர்க்கத்தை மட்டும் எனக்கு சொந்தமாக்க

இதோ வந்து விட்டாள் என் தேவதை.....


பாலைவனமாக இருந்த என் நெஞ்சில்

பால் வார்க்க இதோ வந்து விட்டாள் என் தேவதை.....


தேள் கொட்டிய என் இதயத்தில்

தேன் கொட்ட இதோ வந்து விட்டாள் என் தேவதை.....


வால் வீசி கிடந்த என் உள்ளத்தில்

தென்றல் வீச இதோ வந்து விட்டாள் என் தேவதை.....


இருந்தும் என்ன பயன்?????

என் தேவதை வந்தது கனவில் மட்டும் தானே!!!

No comments:

Post a Comment