Wednesday, June 10, 2009

மறக்க முடியாதவளுக்காக...


உனக்கு என்னை மறந்து போயிருக்கும்

காலப்போக்கில் - எனக்கும் உன்னை மறந்து போகும்

முன்பெல்லாம் - உனக்காக அழுகின்ற போது

கிடைக்கப் போகிறவளுக்காக - அழுகிறேன்

என்றொரு ஆறுதல் இருந்தது.....

இன்று...???


தபால் இல்லாத பிரதேசத்திற்கா நீ

சென்றுவிட்டாய்???

உனக்கொரு கடதாசி எழுதிப்போட

நேரம் இல்லாமல் தான் போய் விட்டதா???


என் வாழ்க்கையை கிழித்து விட்டுப்

போனவளே !!

ஒரு சமூகம் தன் மொழியையே

மறந்து விடும் கவலையோடு

நான் இருக்கிறேன்.....

No comments:

Post a Comment