Wednesday, June 10, 2009

மறவேன்...

வந்தாய் வசந்தம் தந்தாய்
சென்றாய் பிரிந்து நின்றாய்
கொன்றாய் என்னை நன்றாய்
கொழுந்தாய் இதயம் எரித்தாய்
அணுவாய் மனதை சிதைத்தாய்
அறிவாய் ஒரு நாள் புரிவாய்
தெரிவாய் என்னை நாடி வருவாய்
கரும்பாய் கவி பல புனைவாய்
மறுப்பாய் என்னை வெறுப்பாய்
முடிவாய் நான் வெறுப்பேன்
மறைவாய் உள்ள நினைவை
கருவாய் காப்பேன் !
மறவேன்.....

No comments:

Post a Comment