Wednesday, June 10, 2009

காத்திருந்த கன்னி

காகிதத்தில் செய்த கப்பல்
கடல் நடுவில் தத்தளிக்க !
கன்னியவள் மனமின்றோ
காதலனை எண்ணி எண்ணி !
வருவான் வருவானென்றே
அவள் காலமெல்லாம் காத்திருந்து ...!!!
காதலனும் வந்து விட்டான்
கணவனாக வந்து விட்டான் !
கற்பனையில் வாழ்ந்த கன்னி
கண்டவுடன் அதிர்ந்து விட்டாள் !
விழிகளிலே நீர் சொரிய
மங்கையவள் திகைத்து நின்றாள் !
விடையேதும் புரியாது
வேதனையில் வெந்து நின்றாள்...!!!
வந்தவளோ புது மனவி !
புது மெருகு கலையாது
பூரிப்புடன் புன்னகைத்து நின்றாள்...!!!

No comments:

Post a Comment