சித்திரைப் பெண்ணே!!!
இது தான் உனக்கு வைக்க வேண்டிய பெயர்
ஆனால் சித்திரைக்கு நான்கு நாட்கள் முன் பிறந்ததால்
உன் பெயர் மாறி விட்டதடி....
பரவாயில்லை
நீ சித்திரைக்கு முன் பிறந்தாலும் சித்திரை போலவே பசுமையும் உஷ்ணமும் நிறைந்தவள்
என்னடா இவன் உளறுகிறான் என நினைக்கின்றாயா???
நான் உளறவில்லை பெண்ணே - நிஜத்தை தான் செப்புகிறேன்
சித்திரை என்றால் பூத்து குலுங்கும் மலர்களும்
காய்த்துக் கனியும் மரங்களும் சித்திரையின் கத்தரி வெயிலும் தான் நினைவில் வரும்
அது போல பல குணங்களைக் கொண்டவள் பெண்ணே நீ
ஆகவே உனக்கு சித்திரைப் பெண்ணே என நான் வைத்த பெயர்
நிஜமானது தானே....
நீயே சொல் நீ பிறந்த நந்நாளில் உனக்காக - இந்த
கிறுக்கன் கிறுக்கிய சில சில கிறுக்கல்கள்!!!!!

No comments:
Post a Comment