Wednesday, June 10, 2009

மரணம் எப்போது???


சிந்தித்து பார்க்க முடியா

தூரத்தில் இருப்பவனே !

சிதைந்த நம் காதலுக்கு

காரணம் - கர்வம் கொண்ட

நம் மனங்கள் மட்டுமே...


இன்று;

உன்னை நினைத்து

உயிர் விருட்சமது

உள்ளிருந்து

ஊமையாய் அழுகிறது...


இதுவரை;

நான் - பிரிவை மட்டுமே

சந்தித்தேன்

இனி - மரணம்

எப்போது???

No comments:

Post a Comment