மரணம் எப்போது???
சிந்தித்து பார்க்க முடியா
தூரத்தில் இருப்பவனே !
சிதைந்த நம் காதலுக்கு
காரணம் - கர்வம் கொண்ட
நம் மனங்கள் மட்டுமே...
இன்று;
உன்னை நினைத்து
உயிர் விருட்சமது
உள்ளிருந்து
ஊமையாய் அழுகிறது...
இதுவரை;
நான் - பிரிவை மட்டுமே
சந்தித்தேன்
இனி - மரணம்
எப்போது???

No comments:
Post a Comment